ஸூரா ஹப்த் மற்றும் க்ஹல்

உபை இப்னு கஅப் அவர்களின் மூல குர்ஆன் பிரதியிலிருந்த இரண்டு குர்ஆன் சூராக்கள்

Surata al-Hafd and al-Khal'(from Ubayy ibn Ka`b's Qur'an codex)

குர்‍ஆனில் எத்தனை அத்தியாயங்கள் உண்டு? மொத்தம் 114 என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், முஹம்மதுவின் தோழரும், முஹம்மதுவின் நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக இருந்தவரும், மற்றும் மூல குர்‍ஆனின் கைப்பிரதியை வைத்திருந்தவர்களில் ஒருவருமாகிய "உபை இப்னு கஅப் " என்பவரிடம் 116 அதிகாரங்கள் (சூராக்கள்) இருந்தன. உஸ்மான் குர்‍ஆனை தொகுப்பதற்கு முன்பு இவரிடம் இரண்டு அதிகாரங்கள் அதிகபடியாக இருந்தன. அவைகளை அஸ்ஸூயுதி என்பவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு சூராக்களும் குர்‍ஆனின் முதல் சூராவாகிய அல் பாத்திஹா போலவே ஒரு வேண்டுதல் வடிவில் உள்ளது.

இவைகள் பற்றி மேலும் அறிய இக்கட்டுரையின் கடைசியில் தரப்பட்டிருக்கும் இரண்டு தொடுப்புக்களை படிக்கவும்.

Surat al-Hafd

You (alone) we worship, and to You (alone) we pray and lie prostrate,

and to You (alone) we proceed and have descendants.

We fear Your torture and hope for Your mercy.

Truly Your torture will overtake the infidels.

 

ஸூரா ஹப்த்

உன்னை (மட்டுமே) நாங்கள் வணங்குகிறோம்
உன்னை (மட்டுமே) நாங்கள் தொழுகிறோம் மற்றும் விழுந்து வணங்குகிறோம்
உன்னிடமிருந்து (மட்டுமே) நாங்கள் வந்தோம்
உன்னுடைய தண்டனைக்கு பயப்படுகிறோம் மற்றும் உன்னுடைய கிருபை மீதே நம்பிக்கைகொண்டுள்ளோம்
உண்மையாகவே உன்னுடைய தண்டனை காபிர்களை பிடிக்கும்

Surat al-Hafd

O Allah, You (alone) we ask for help and forgiveness.

We speak appreciatingly of Your goodness. Never do we disbelieve You.

We repudiate and disbelieve anyone who follows immorality.

 

ஸூரா க்ஹல்

ஓ அல்லாஹ், உன்னிடம் (மட்டுமே) நாங்கள் உதவியையும் மன்னிப்பையும் கேட்கிறோம்
நாங்கள் உன்னுடைய நன்மைகளை புகழ்ந்து பேசுகிறோம்
நாங்கள் உன்னை மறுதலிக்கமாட்டோம்
தீயவர்களை பின்பற்றுபவர்களை நாங்கள் நிராகரிக்கிறோம் அவர்களை நம்பமாட்டோம்.

 

ஸூரா ஹப்த் மற்றும் க்ஹல் என்ற இந்த இரண்டு ஸூராக்கள் (அத்தியாயங்கள்) ஸுயூதி எழுதிய இத்கான் என்ற இஸ்லாமிய நூலிலும் இன்னும் இதர நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு அத்தியாயங்கள் உபை இப்னு கஅப் என்ற முஹம்மதுவின் தோழரின் குர்‍ஆன் தொகுப்பில் காணப்பட்டது, உஸ்மான் குர்‍ஆனை தரப்படுத்தும் போது இதனை சேர்த்துக்கொள்ளவில்லை. ஆகையால், இன்றைய குர்‍ஆனில் இவ்விரு அத்தியாயங்களை காணமுடிவதில்லை.

 இந்த குர்‍ஆன் அத்தியாயங்கள் "விண்ணப்பம்" போன்ற அமைப்பில் உள்ளது, இது மற்ற குர்‍ஆன் வசனங்களைப் போல இல்லை. ஆனால், குர்‍ஆனின் முதல் அத்தியாயமாகிய "அல் பாதிஹா" வும் ஒரு விண்ணப்ப வடிவில் தான் உள்ளது என்பது கவனித்தில் கொள்ளவேண்டும். இஸ்லாமியர்கள் முன்வைக்கும் சவாலானது, குர்‍ஆன் வசனங்களில் காணப்படும் "அர்த்தம்" போல இருக்கும் அத்தியாயங்களை கொண்டு வரும்படி அல்ல, அதற்கு பதிலாக, குர்‍ஆன் வசனங்கள் எந்த நடையில் உள்ளதோ அதே நடையில் மற்றவர்களால் ஒரு அத்தியாயமாவது கொண்டு வரமுடியுமா என்பது தான்.  ஒருவேளை குர்‍ஆன் வசனங்களில் காணப்படும் அர்த்தத்திலேயே, அத்தியாயத்தை கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாமியர்கள் கூறினால், குர்‍ஆன் போல இல்லாத இதர குர்‍ஆன் வசனங்களையும் ஒதுக்கிவிடவேண்டியது தான். 

ஆங்கில மூலம்: Surata al-Hafd and al-Khal' 

இதர கட்டுரைகளை படிக்கவும்: குர்‍ஆன் ஒரு அற்புதமா?