வாட்ஸப் வலி: முஹம்மதுவைப் பற்றி அறிந்திருக்கவேண்டிய 10 அற்பு(அபத்)தங்கள்

என்னுடைய சொந்தக்கார தம்பி ஒருவர், ஒரு வாட்ஸ்அப் செய்தியை எனக்கு அனுப்பினார். ஒவ்வொருவரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டிய முஹம்மது பற்றிய 10 அற்புதங்கள் என்ற‌  தலைப்பில் அந்த செய்தி ஆங்கிலத்தில்  இருந்தது.

அதனை படிக்கும்போது எனக்கு சிரிப்புதான் வந்தது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த, 10 அற்புதங்களில் ஒரு அற்புதத்தை கூட குர்ஆனிலோ நம்பகமான ஹதீஸ்களிலோ காண முடியாது. இஸ்லாமை நன்றாக கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர்கள் கூட‌ அந்த பத்து அற்புதங்களை பார்த்தால் தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். இருந்தபோதிலும் அநேக முஸ்லிம்கள் தாங்கள் அனுப்பும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன என்று புரிந்து கொள்ளாமல், தாங்கள் அல்லாஹ்வுக்கு ஊழியம் செய்வதாக நினைத்துக் கொண்டு பொய்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். 

சரி வாருங்கள், அந்த பத்து அற்புதங்கள் எவைகள் என்றும் அவைகளில் உள்ள பொய்கள் என்ன என்றும் சிறிது ஆய்வு செய்வோம். இதைப் பார்த்தாவது முஸ்லிம்கள் இப்படிப்பட்ட பொய்களை பரப்பாமல் இருப்பார்களாக.  

[இந்த சிறிய கட்டுரையின் மூலமாக கிறிஸ்தவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை கொடுக்க விரும்புகிறேன். கிறிஸ்தவர்களில் சிலர் உண்மைக்கு புறம்பான செய்திகள் தங்களுக்கு வரும் போது, மேற்கண்ட  செய்தியை பரப்பும் முஸ்லிம்களைப்போல எதைப் பற்றியும் சிந்திக்காமல் வாட்ஸ்அப் மூலமாக மற்றவர்களுக்கு உடனே அனுப்பிவிடுகிறார்கள். இன்டர்நெட் இலவசம் என்பதால் தங்களுக்கு வரும் அனைத்து செய்திகளையும் தேவையில்லாமல் பரப்பிக் கொண்டு இருப்பவர்கள் இனியாவது அதனை தவிர்ப்பார்களாக.]

எனக்கு வந்த வாட்ஸ்அப் செய்தி இது தான்:

10 MIRACLES YOU MUST KNOW ABOUT PROPHET MUHAMMAD(S.A.W)

1. Do you know that "Flies,insects, ants and mosquitoes" never land on his body talk less of bitten him? (S.A.W)

2. Do you know that he did not "yawn" in his life time? (S.A.W)

3. Do you know that both "Domestic and wild Animals" never a second angry with him? (S.A.W)

4. Do you know that if he "sleeps" he hears any "conversation"? (S.A.W)

5. Do you know that he "sights" every thing both "front" and "back" at the same time without turning? (S.A.W)

6. Do you know that "Land" covers his "urine" and stool immediately he passed them?(S.A.W)

7. Do you know that he is always "one feat taller" than any body that comes "near" him? (S.A.W)

8. Do you know that he was "circumscribed, washed and cleaned in his Mother's womb before born to this world?(S.A.W)

9. Do you know that he never had a "wet dream"that signify Men's "puberty"?(S.A.W)

10. Do you know that he has no "shadow" even in the "Sun", Moon or "Light"?(S.A.W).

Even if you did not forward, you will be rewarded, but if you do, your reward will be unmeasurable!!!

தமிழாக்கம்:

மேற்கண்ட 10 அற்புதங்களை முதலில் தமிழில் படிப்போம்:

அற்புதம் 1: உங்களுக்கு தெரியுமா? ஈக்கள், கொசுக்கள், எறும்புகள்  மற்றும் சின்ன சின்ன பூச்சிகள் இவைகளெல்லாம் முஹம்மதுவின் உடலில் உட்காரவில்லை, அதேபோல அவரை கடிக்கவில்லை.

அற்புதம் 2: முஹம்மது அவர்கள் தம் வாழ்நாளில் ஒருமுறை கூட கொட்டாவி விடவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?

அற்புதம் 3: முஹம்மது அவர்கள் மீது வீட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும் ஒரு நொடி கூட கோபமாக இருந்ததில்லை.

அற்புதம் 4: முஹம்மது அவர்கள் தூங்கும் போது கூட மற்றவர்கள் பேசுவதை கேட்கமுடியும்.

அற்புதம் 5: முஹம்மது அவர்கள் முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேரத்தில் பார்ப்பார், அதாவது தலையை பின்னுக்கு திருப்பாமலேயே தனக்கு பின் நடப்பதை பார்ப்பார்.

அற்புதம் 6: முஹம்மது அவர்கள் சிறுநீர்  அல்லது மலம் கழித்தால், உடனே பூமியானது மண்ணால் அதனை மூடிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அற்புதம் 7: முஹம்மது அவர்கள் யார் அருகில் சென்றாலும் அந்த நபரைக் காட்டிலும் ஒரு அடி உயரமாகவே தென்படுவார்.

அற்புதம் 8: முஹம்மது அவர்கள் தம் தாயின் வயிற்றில் இருக்கும் போது சுன்னத்(விருத்தசேதனம்) செய்யப்பட்டார், கழுவப்பட்டார் (தீயவைகள் நீக்கப்பட்டது) என்பதை நீங்கள் அறிவீர்களா?

அற்புதம் 9: பொதுவாக வாலிபர்கள் ஒரு வயதை அடைந்தவுடன் தம்மை அறியாமல் தூக்கத்தில் அவர்களுக்கு "விந்து வெளிப்பட்டுவிடும்", இது போல முஹம்மதுவிற்கு நடக்கவே இல்லை.

அற்புதம் 10: முஹம்மது அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை, சூரியன், நிலவு மற்றும் இதர வெளிச்சத்தின் கீழே அல்லது பக்கத்திலே நின்றாலும், அவரது நிழல் பூமியில் விழுவதில்லை.

மேற்கண்ட செய்தியை வாட்ஸப்பில் பார்க்கும் முஸ்லிம் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்து உடனே மற்றவர்களுக்கு அனுப்பிவிடுகின்றான்.  ஆனால் இந்த செய்தி உண்மையா? இதனால் இஸ்லாமுக்கு ஏதாவது கேடு விளையுமா? என்று அவன் சிந்திப்பதில்லை, இப்படி சிந்திக்க இஸ்லாம் விடுவதும் இல்லை என்பது தான் வேதனை.

மேற்கண்டவைகள் அனைத்தும் அற்புதங்கள் தான் என்று நம்பும் முஸ்லிம்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:

அற்புதம் 1:  பற்றிய கேள்விகள்

1) ஒருவேளை இந்த அற்புதங்களை முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்திருந்தான் என்று நம்பினாலும், இதன் மூலமாக அல்லாஹ் உலகிற்கு எதனைச் சொல்லவருகிறான் என்று உங்களால் சொல்லமுடியுமா? 

2) முஹம்மதுவின் உடலில் ஒரு கொசுவோ, ஒரு ஈயோ உட்காராமல் இருந்ததினால் யாருக்கு என்ன லாபம்? இதன் மூலம் முஹம்மதுவிற்கு என்ன லாபம்? அவருடைய ஸஹாபாக்களுக்கு என்ன லாபம்? அக்கால முஸ்லிம்களுக்கும் இக்கால முஸ்லிம்களுக்கும் என்ன லாபம்? இதற்கான பதிலை யாராவது சொல்ல முடியுமா?

3) நான் அனுப்பிய இறைத்தூதர் மீது ஒரு கொசு கூட உட்காரக் கூடாது என்று ஜாக்கிரதை பட்ட அல்லாஹ், ஏன் ஒரு குறிப்பிட்ட யுத்தத்தில் ஒருவன் எரிந்த கல்லால்  முஹம்மதுவின் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியது? கொசுக்களிலிருந்து முஹம்மதுவை காப்பாற்றுவது சிறந்ததா? எதிரிகளின் ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவது சிறந்ததா?

அற்புதம் 2:  பற்றிய கேள்விகள்

4) முஹம்மது கொட்டாவி விட்டார் என்று முஸ்லிம்கள் ஒப்புக்கொண்டால், அதனால் முஹம்மதுவிற்கு என்ன தீமை விளைந்துவிடும்? ஏன் முஸ்லிம்கள் அற்பமான காரியங்களை பொய்களாக பரப்பிக்கொண்டு வருகிறார்கள்?

5) கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருகிறது என்றும், அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறான் என்றும் வரும் ஹதீஸ்களின் அடிப்படையில், இப்படி முஹம்மது வாழ்நாள் முழுவதும் கொட்டாவியை விடவில்லை என்றுச் சொல்வது முட்டாள்தனமாகப் படவில்லை?

6) முதலில், அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறான் என்பதும், ஷைத்தானிடமிருந்து கொட்டாவி வருகிறது என்றுச் சொல்வதுமே, ஒரு பித்தலாட்டாம் ஆகும். ஏன் அல்லாஹ் கொட்டாவியை வெறுக்கிறான்? அவன் தானே மனிதனை படைத்தான்! அவன் தானே அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறான்! வெறுக்கின்ற ஒன்றை எப்படி மனிதனில் உருவாக்கியுள்ளான் அல்லாஹ்? கொட்டாவி விடுவதினால் நன்மைகள் என்ன? அது ஏன் வருகிறது போன்றவைகளை இணையத்தில் தேடி படித்துக் கொள்ளுங்கள்.

7) சரி முஹம்மது கொட்டாவி விடவில்லை என்றே நாம் கருதுவோம். 1400 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவர் கொட்டாவி விடவில்லை என்பதால், இன்று உலக முஸ்லிம்களுக்கு என்ன நன்மை உண்டாகிவிட்டது? அன்று முஹம்மதுவிற்கு என்ன நன்மை இதனால் உண்டானது? இக்கேள்விகளுக்கு யாராவது பதில்  சொல்லமுடியுமா?

அற்புதம் 3:  பற்றிய கேள்விகள்

8) வீட்டு மிருகங்களும், கட்டு மிருகங்களும் முஹம்மது மீது கொபம் கொள்ளவில்லை என்றுச் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? இதனால் என்ன நன்மை உலக முஸ்லிம்களுக்கு உண்டாகிவிட்டது?

9) முஸ்லிம்கள் சொல்வதைப் பார்த்தால், முஹம்மது ஒரு ஆவி அல்லது ஆத்துமா போன்று கண்ணுக்கு தெரியாமல்  இருந்தால் தான், வீட்டு/காட்டு மிருகங்கள் பார்க்கமுடியாது, அப்போது தான் இப்படிப்பட்ட காரியங்கள் சாத்தியமாகும். முஹம்மதுவை ஒரு ஹீரோவாக காட்டுவதற்கு இப்படியெல்லாம் தரம் தாழ்த்தி அவரை வருணிக்கவேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு ஏன் வந்தது?

அற்புதம் 4:  பற்றிய கேள்விகள்

10) முஹம்மது அவர்கள் தூங்கும் போது கூட மற்றவர்கள் பேசுவதை கேட்கமுடியும் – ஏன்? ஒரு மனுஷனை நிம்மதியாகவும் தூங்கவிடமாட்டானா அல்லாஹ்?

11) இது அற்புதமோ, ஆசீர்வாதமோ அல்ல முஸ்லிம் நண்பர்களே! இது முஹம்மதுவிற்கு கொடுக்கப்பட்ட‌ மிகப்பெரிய சாபக்கேடு (உண்மையாகவே இது நடந்திருந்தால்!).

12) நன்றாக ஆழமாக தூங்கும் மனிதன் தான் ஆரோக்கியமான மனிதன். இப்படிப்பட்ட அற்புதங்களை முஹம்மதுவிற்கு கொடுப்பதினால், முஸ்லிம்கள் 'அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற' ஷிர்க் என்ற அல்லாஹ்வால் மன்னிக்கமுடியாத பாவத்தை செய்பவர்கள் ஆகிவிடுகிறார்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

13) தூங்கும் போதும் மற்றவர்கள் பேசுவதை கேட்கும் குணம், இறைவனுக்கு உரியது, அதாவது இறைவன் தூங்குவதில்லை என்றுச் சொல்லலாம். இந்த குணம் முஹம்மதுவிற்கு உண்டு என்று நீங்கள் சொல்வதினால், அவரையும் பாவியாக்கி, நீங்களும் பாவியாக மாறுகிறீர்கள், முஸ்லிம்களே! உங்களை காப்பாற்றவே நான் இதனை எழுதுகிறேன், மனந்திரும்புங்கள்!

அற்புதம் 5:  பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் முன் பக்கமும் பின் பக்கமும் ஒரே நேரத்தில் பார்ப்பார், அதாவது தலையை பின்னுக்கு திருப்பாமலேயே தனக்கு பின் நடப்பதை பார்ப்பார்.

14) உடலை திருப்பாமல், தலையை மட்டும் திருப்பி பார்ப்பது போன்ற கம்பியூட்டர் கிராபிக்ஸ் சமாச்சாரத்தைக் காட்ட‌ இது என்ன பேய் படமா? 

15) அறிவு உள்ளவன் யாராவது இப்படி சொல்லுவானா? கண்கள் முன்னால் இருந்தால், அது எப்படி அவர் பின்னால் பார்க்கமுடியும்? 

16) இறைவனுக்கு இருக்கும் சர்வ வியாபி என்ற குணத்தை முஹம்மதுவிற்கு கொடுப்பதினால், முஸ்லிம்கள் இணைவைக்கும் பாவத்தைச் செய்கிறார்கள் என்பதை முஸ்லிம்களுக்கு  உணர்த்த இன்னும் எத்தனை யுகங்கள் தேவையோ எனக்கு தெரியவில்லை!

அற்புதம் 6:  பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் சிறுநீர்  அல்லது மலம் கழித்தால், உடனே பூமியானது மண்ணால் அதனை மூடிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

17) இந்த அற்புதத்தை முஹம்மதுவிற்கு கொடுப்பதைவிட, அல்லாஹ் ஒன்று செய்திருக்கலாம், அதாவது முஹம்மது வாழ்நாள் முழுவதும் சிறுநீர் கழிக்காதவராகவோ, மலம் கழிக்காதவராகவோ செய்திருந்தால், மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

18) எப்படியெல்லாம் முஸ்லிம்கள் சிந்திக்கிறார்கள் பாருங்கள்? ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ!  முஸ்லிம்களே, முஹம்மது மலஜலம் கழிக்கும் போது, பூமியானது தானாகவே அதனை மூடும் அளவிற்கு ஒரு கேவலமான அற்புதத்தை முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுப்பதற்கு ஒரு பலமான காரணத்தைச் சொல்லுங்கள்!

அற்புதம் 7:  பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் யார் அருகில் சென்றாலும் அந்த நபரைக் காட்டிலும் ஒரு அடி உயரமாகவே தென்படுவார்.

19) மூன்று அடி உள்ள ஒரு குள்ளமான மனிதனுக்கு அருகில், முஹம்மது சென்றால், அவர் நான்கு அடியாக தென்படுவாரா? அப்படியானால், பார்ப்பதற்கு மிகவும் கேவலமான, அல்லது கேலியான உருவமாக உங்கள் முஹம்மது தென்படமாட்டார்?  

20) சர்கஸ்ஸில் கோமாளிகள் வந்து நமக்கு சிரிப்பு காட்டுவார்களே! அவர்களில் சிலர் குள்ளமாகவும் இருப்பார்கள், அவர்கள் பக்கத்தில் முஹம்மதுவை நிற்கவைத்து, கண்கொள்ளா காட்சியை பார்க்க முஸ்லிம்கள் விரும்புவார்களா?

en.wikipedia.org/wiki/List_of_the_verified_shortest_people

55 செ.மீ. உள்ள இந்த நபரின் பக்கத்தில் முஹம்மது சென்றால், அவர் 85 சென்டி மீட்டர் உயரம் இருப்பார் என்று சொல்ல வருகிறீர்களா? முஸ்லிம்களே!

21) உலகில் மிகவும் உயரமான மனிதன் 8 அடிக்கு மேல் இருந்தால், இவரது அருகில் முஹம்மது வந்தால், ஒன்பது அடியாக காணப்படுவாரா? 

www.guinnessworldrecords.com/news/2019/2/a-history-of-record-breaking-giants-100-years-after-the-tallest-man-in-the-world-511577

22) சரி போகட்டும், முஸ்லிம்களின் வழிக்கே வருவோம். ஒருவேளை 2 அடி உயரமுள்ளவனும், 8 அடி உயரமுள்ளவனும் ஒரே இடத்தில் இருக்கும் போது, முஹம்மது அவர்கள் அருகில் வந்தால் எந்த உயரத்தில் காணப்படுவார்?

இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள் (2 நிமிடங்கள்), கின்னஸ் சாதனை புரிந்த இருவர் இதில் காணப்படுகிறார்கள், மிகவும் குள்ளமான, மிகவும் உயரமான இருவர் சந்திக்கிறார்கள். இவர்கள் மத்தியில் முஹம்மது நின்றால் அவர் எப்படி காணப்படுவார்?

The World's Tallest Man Meets World's Smallest: 2015 - www.youtube.com/watch

இப்படியெல்லாம் முஸ்லிம்கள் தன்னைப் பற்றி பரப்புவார்கள் என்றும், என்னைப்போன்றவர்கள் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பார்கள் என்றும் முஹம்மது அறிந்திருந்தால், தனக்கு அந்த இறைத்தூதர் பதவி வேண்டாம் என்று சொல்லி மறுத்திருந்திருப்பார். பாவம் முஹம்மது, முஸ்லிம்களிடமிருந்து அவரை யாராலும் காப்பாற்றமுடியாது, இவ்வளவு பெரிய அறிவாளிகளை  இஸ்லாம் பெற்றுத்தள்ளிக்கொண்டு இருக்கிறது!

அற்புதம் 8: பற்றிய கேள்விகள்

முஹம்மது அவர்கள் தம் தாயின் வயிற்றில் இருக்கும் போது சுன்னத்(விருத்தசேதனம்) செய்யப்பட்டார், கழுவப்பட்டார் (தீயவைகள் நீக்கப்பட்டது) என்பதை நீங்கள் அறிவீர்களா?

23) இப்படி கேட்கிறேன் என்று கோபம் கொள்ளக்கூடாது முஸ்லிம்கள். முஹம்மதுவின் மர்ம உறுப்பை சஹாபாக்களில் (அவரது மனைவிகள் தவிர) யாராவது பார்த்திருக்கிறார்களா?  ஆம், பார்த்திருக்கிறார்கள் என்று சொல்வீர்களலென்றால், யார் பார்த்தது? பெயரைச் சொல்லமுடியுமா? இஸ்லாமில் இதற்கு ஆதாரமுண்டா? அல்லது முஹம்மது எப்போதாவது "நான் பிறந்த பிறகு எனக்கு சுன்னத்து செய்யப்படவில்லை, நான் பிறப்பதற்கு முன்பாகவே சுன்னத்து செய்யப்பட்டேன்" என்று சொல்லியுள்ளாரா?

24) ஒருவேளை, ஒரு குறை பிரசவமாகவோ, அல்லது மர்ம உறுப்பு அரைகுறையாக வளர்ந்த  நபராக‌ முஹம்மது பிறந்திருப்பாரோ!

அற்புதம் 9: பற்றிய கேள்விகள்

பொதுவாக வாலிபர்கள் ஒரு வயதை அடைந்தவுடன் தம்மை அறியாமல் தூக்கத்தில் "விந்து வெளிப்பட்டுவிடும்" இது போல முஹம்மதுவிற்கு நடக்கவே இல்லை.

25) தன் வாலிபவயதில் இப்படி தனக்கு ஈரமான கனவு அல்லது விந்து தூங்கும் போது வெளிப்படவில்லை என்று முஹம்மது எங்கேயாவது சொல்லியுள்ளாரா? ஆதாரம் காட்டமுடியுமா?

26) முஹம்மதுவிற்கு 30 ஆண்களின் சக்தி இருந்தது என்ற சஹாபாக்கள் பேசிக்கொண்ட ஹதீஸ்கள் இருக்கும் போது, அவர் “எதற்கும்” லாயக்கில்லை என்பது போன்ற செய்திகளை வாட்ஸப்பில் பரப்புவது நியாயமாக இருக்கிறதா முஸ்லிம்களே!

27) ஒரு ஆரோக்கியமான வாலிபனுக்கு, பொதுவாக அப்படி நடப்பது சகஜமே, அது என்னவோ பெரும் பாவம் போலவும், தங்களுடைய நபி ரொம்ப சுத்தம் போலவும், செய்திகளை பரப்புவது மிகவும் தப்பு முஸ்லிம்களே! மேலும், ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையென்றால், மக்கள் வேறு மாதிரி நினைக்க வாய்ப்பு உண்டாகிவிடும். முஹம்மதுவை ஒரு ஹீரோவாகவும், நல்லவராகவும் காட்டுவதற்காக, பொய்யான அற்புதங்களை பரப்பிகொண்டு, கடைசியாக அவரது ஆண்மைக்கே வேட்டு வைத்துவிடுவீர்கள் போல இருக்கிறதே முஸ்லிம்களே!

அற்புதம் 10: பற்றிய கேள்விகள் 

முஹம்மது அவர்களின் நிழல் பூமியில் விழுவதில்லை, சூரியன், நிலவு மற்றும் இதர வெளிச்சத்தின் கீழே அல்லது பக்கத்திலே நின்றாலும், அவரது நிழல் பூமியில் விழுவதில்லை.

28) சுத்தம்! இனி முஹம்மதுவை அல்லாஹ்வே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. ஸஹி ஹதிஸ்களிலோ, குர்‍ஆனிலோ இதற்கு ஆதாரமுண்டா? இஸ்லாமிய அறிஞர் சுயூதியே இதனை எழுதினாலும் அது தப்பு முஸ்லிம்களே!

29) நிழல் தெரியாத மனிதனை உலகம் கண்டிருக்குமா? இதோ இருக்கிறார், இஸ்லாமிய நபி முஹம்மது!  முஹம்மதுவை அல்லாஹ்விற்கு இணையாக பேசுவது தப்பு முஸ்லிம்களே!

30) முஹம்மதுவின் நிழல் பூமியில் விழவில்லை என்று பொய்யாக சொல்வதை விட, முஹம்மதுவின் மீது வெயிலே படவில்லை என்று  சொல்லியிருந்தால், குறைந்தபட்சம் அந்த பாலைவன வெயிலிலிருந்து ஒரு பேச்சுக்காகவாவது நீங்கள் அவருக்கு நிம்மதியை கொடுத்திருந்திருக்கலாம் முஸ்லிம் நண்பர்களே!

இந்த 10 அற்புதங்கள் செய்துமா? மக்காவினர் அவரை நபி என்று ஏற்கவில்லை?

முஹம்மதுவின் மீது கட்டுக்கதைகளை அள்ளிவீசும் முஸ்லிம்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறார்கள். உண்மையாகவே மேற்கண்ட 10 அற்புதங்கள் முஹம்மதுவின் வாழ்வில் நடந்திருந்தால், பிறந்ததிலிருந்தே, முஹம்மது ஒரு தெய்வீகப்பிறவியாக இருந்திருப்பார்.

அவர் அனாதையாக இருந்திருக்கவேண்டியதில்லை, அவரை ஊரே அள்ளி அணைத்திருந்திருக்கும்.

அவர் உணவுக்காகவும், உடைக்காகவும் அலைந்து இருந்திருக்கவேண்டிய அவசியம் இருந்திருக்காது.

ஒருவருடைய‌ நிழல் பூமியில் படவில்லை என்றுச் சொல்வதே பெரிய அற்புதமில்லையா? 

அவரை நபியாக மக்கள் சின்ன வயதிலிருந்தே ஏற்றுக்கொண்டு இருந்திருப்பார்கள்.

அவரை கொல்ல மக்காவினர் முயன்று இருந்திருக்கமாட்டார்கள்.

இப்படியெல்லாம் சிந்திக்க முஸ்லிம்களால் முடியாது. அவர்களின் கண்களை இவ்வுலகத்தின் அதிபதி அதாவது அல்லாஹ் மூடிவிட்டான், அவர்களின் காதுகளுக்கு திரைபோட்டுவிட்டான், அவர்களின் மூளையிலிருந்து சிந்திக்கும் திறமையை நீக்கிவிட்டான் என்றுச் சொல்வதைத் தவிர வேறு என்னத்தைச் சொல்லமுடியும்?

இனியாவது வாட்ஸப் செய்திகளை முக்கியமாக இஸ்லாம் பற்றிய செய்திகளை கொஞ்சம் சிந்தித்து ஃபார்வோட் செய்யுங்கள்.

வாட்ஸப் வழியா? வலியா? என்று கேட்டால், இந்த செய்தியை பொருத்தமட்டில் 'வாட்ஸப் வலி' தான் என்பதை கற்றறிந்த முஸ்லிம்கள், சிந்திக்கும் முஸ்லிம்கள் இப்போதைக்கே புரிந்துக்கொண்டு இருப்பார்கள்.


வாட்ஸப் வழி(வலி)கள் பக்கம்

உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்