பைபிள் புகழும் இஸ்மவேல் (இது தான் இஸ்லாம் தள கட்டுரைக்கு): மறுப்புக் கட்டுரை

இது தான் இஸ்லாம் தள அன்பர்கள் "பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை முன்வைத்தனர். அதற்கான மறுப்பை மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிக்கின்றேன். யார் மனதை புன்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பைபிளில் சொல்லப்பட்டதை முன் வைக்கின்றோம். 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

Monday, July 9, 2007 

பைபிள் புகழும் இஸ்மவேல் - இஸ்மவேலை எதிர்க்கும் மதகுருக்கள். 

பரங்கிப்பேட்டை ஜி.நிஜாமுத்தீன். 

இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம். 

ஆப்ரஹாமின் மூத்த மகன் இஸ்மாயீல் (பைபிளில் இஸ்மவேல்) இந்த இஸ்மவேலின் வம்சத்தில் தான் முஹம்மத் (ஸல்) என்ற இறைத்தூதர் அவர்கள் பிறக்கிறார்கள். கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது. மதகுருக்கள் அந்த அளவிற்கு அந்த மக்களை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள பெரும்பாடு பட்டு வருகின்றார்கள். என்றாலும் வரலாறு இஸ்லாமிய வளர்ச்சியை தன்னுல் பதித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

உமர்:

யேகோவா தேவன் "இஸ்மவேலை" ஆசீர்வதிக்கிறார். அவர் மூலமாக 12 பிரபுக்களை உருவாக்குவேன் என்கிறார். அவனை பெரிய நாடு ஆக்குவேன் என்று ஆசீர்வதிக்கிறார். 

//நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

. . . 
இஸ்மவேல் (இறைத்தூதர் இஸ்மாயீல்) அவர்களின் வரலாற்றை மறைத்த கிறிஸ்த்தவ உலகம்.// 

உண்மையில் இஸ்மவேலின் வரலாற்றைச் சொன்னதே கிறிஸ்தவம் தான். இஸ்மவேலுக்கு எத்தனை பிள்ளைகள், அவர்கள் பெயர் என்ன? அவர் யாரை திருமணம் செய்துக்கொண்டார், எத்தனை வயது இருக்கும் போது மரித்தார், என்று பல விவரங்களை உலகிற்கு பைபிள் தான் சொன்னது.

ஆதியாகமம்: 16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. 

ஆதியாகமம்: 25: 12. சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்ச வரலாறு ,13. பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம்,14. மிஷ்மா, தூமா, மாசா,15. ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.16. தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே.17. இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். 

// கிறிஸ்த்தவ உலகம் முஹம்மத் அவர்களை மணமுரண்டாக நிராகரித்து வருகன்றது.// 

நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்டு வருகிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பைபிள் தெளிவாகச் சொல்கிறது, இயேசுவிற்கு அடுத்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடுத்து வேறு யாரும் வரவேண்டிய அவசியமில்லை என்று, இப்படி இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி முகமதுவை நம்ப முடியும்? சொல்லுங்கள்.

"மெஹ்தி" Mehdi 

ஷிய முஸ்லீம்கள் "மெஹ்தி" Mehdi என்ற ஒரு "நபி" அல்லது ஒருவர் வருவார், அவர் வந்து உலகத்தை மாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவரை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவரைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளது என்று விகீபீடியா சொல்கிறது (http://en.wikipedia.org/wiki/Mahdi). எனவே, ஒருவர் நபி என்று வந்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. 

வந்தவர் உண்மையாக இறைவன் அனுப்பியவராக இருந்து, மக்கள் அவரை நம்பவில்லையானால், அவர்களுக்கு இறைவன் அதற்கேற்ற கூலி கொடுப்பான் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் விவரமாக எல்லாம் சொன்னதால்( ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை), நாங்கள் நம்புவதில்லை, அவ்வளவு தான். 

ரஷீத் காலிஃபா: 

ரஷீத் என்று ஒருவர் கூட ஒரு நபி என்று சொல்லிக்கொண்டு வந்தார் (November 19, 1935 – January 31, 1990) , குர்-ஆனில் உள்ள "Numerical Miracle" என்று சொல்லிக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். தான் மொழி பெயர்த்த குர்-ஆனில் "தன் பெயரை" கூட சேர்த்துக்கொண்டார். 

தன்னிடம் அல்லா பேசுவதாகச் சொன்னார், அவரையும் எத்தனையோ பேர் அங்கீகரித்தனர். தான் சொல்லும் இஸ்லாம் தான் உண்மையானது, இப்போது உள்ளது உண்மையானது இல்லை என்றுச் சொன்னார். 

இவரை ஒரு பெரிய "அல்லாவின் சேவகன்" என்று அஹமத் தீதத் (Ahmad Deedat) என்ற இஸ்லாமிய ஊழியர் கூட புகழ்ந்தார். இவரின் Numerical Miracle பற்றி மிகவும் அதிகமாக அஹமத் தீதத் புகழ்ந்தார்.

படிக்கவும் இங்கே: http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

Khalifa was initially well-received throughout the Muslim world upon his mathematical discoveries embedded in the text of the Quran. Prominent Shaykh Ahmed Deedat referred to him as a "great servant" of God in his book based on Khalifa's discoveries "Al-Qur'an: The Ultimate Miracle

1991ல் அவரை கொலை செய்தார்கள். இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இவரை அஹமத் தீதத் புகழ்ந்துள்ளாரே. இவரை நம்பும்படி நான் சொல்லவில்லை, இப்படி பல பேர் வருவார்கள் என்றுச் சொல்கிறேன். (ஒரு தமிழ் பாட்டு: யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது..) 

ரஷீத் அவர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: 19.org/km/RK/1

கீழ் கண்ட வசனங்களில் அவர் தன்னுடைய பெயரை எழுதிக்கொண்டு குர்-ஆனை மொழி பெயர்த்தார். இவைகள் முகமதுவிற்கு என்று எங்களுக்குத் தெரியும்.

Quran 13:30 

We have sent you (O Rashad) to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny." 

Quran 13:38 

We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without GOD's authorization, and in accordance with a specific, predetermined time. 

Quran 25:56 

We have sent you (Rashad) as a deliverer of good news, as well as a warner. 

Quran 34:28 

We have sent you (O Rashad) to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know. 

Quran 34:46 

Say, "I ask you to do one thing: Devote yourselves to GOD, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution." 

Quran 36:3 

Most assuredly, you (Rashad) are one of the messengers. 

Quran 42:24 

Are they saying, "He (Rashad) has fabricated lies about GOD!"? If GOD willed, He could have sealed your mind, but GOD erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts. 

Quran 81:22 

Your friend (Rashad) is not crazy.

இப்படி சிலர் இருக்கிறார்கள், இவரை நபி என்று நாங்கள் (ஏன், நீங்கள் கூட) ஏற்றுக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள். 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

பைபிள் கூறியுள்ள இஸ்மவேல் பற்றிய விபரங்களை ஊன்றி கவனித்தால் முஹம்மத் அவர்களின் தத்ரூபம் தெளிவாக புரிந்து விடும். இஸ்மவேல் பற்றி மதகுருக்களி்ன் பயத்தால் பைபிளில் ஏற்பட்ட மாற்றமும் விளங்கும்.

உமர்:

  • பைபிளில் எங்கு மாற்றினார்கள் ? 
  • என்ன மாற்றினார்கள்? 
  • மாற்றுவதற்கு முன்பு அந்த வசனம் எப்படி இருந்தது? 
  • இப்போது எப்படி உள்ளது? 
  • மாற்றப்படுவதற்கு முன்பு இருந்த பைபிள் பிரதிகள் ஏதாவது இருந்தால் காட்டுங்களேன்? 

போன்றவற்றைச் தயவு செய்து சொல்லுங்கள் Please ....

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

ஆப்ரஹாமின் முதல் மகனான இஸ்மவேலைப் பாராட்டி பைபிளில் பல வசனங்கள் உள்ளன. 

இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிதமாக பலுகவும் பெருகவும் பண்ணுவேன். அவன் பணிரென்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். (ஆதியாகாமம் 17:20) 

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பேத் தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். 

தன் மகன் குறித்து சொல்லப்பட்ட இந்தக் காரியம் அபிராமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. 

அப்போது தேவன் அபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும் உன் அடிமைப் பெண்ணையும் குறித்து சொல்லப்பட்டது உனக்கு துக்கமாயிருக்க வேண்டாம். ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும். ஆதலால் சாராள் உனக்கு சொல்வதெல்லாவறறையும் கேள். 

அடிமைப் பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால் அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். 

அபிரகாம் அதிகாலையில் எழுந்து அப்பத்தையும் ஒரு துருத்தித் தண்ணீரையும் எடுத்து ஆகாருடைய தோளின் மேல் வைத்து பிள்ளையையும் ஒப்புக் கொடுத்து அவளை அனுப்பி விட்டான். அவள் புறப்பட்டுப் போய் 'பெயர்செபா'வின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். 

துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்த பிறகு அவள் பிள்ளையை ஒரு செடியின் கீழே விட்டு பிள்ளை சாகிறதை நான் பார்க்க மாட்டேன் என்று எதிரே அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சப்தமிட்டு அழுதாள். 

தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே. பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். 

நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். 

தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அப்போது அவள் ஒரு தண்ணீர் துரவைக் கண்டு போய் துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள். 

தேவன் பிள்ளையுடன் இருந்தார். அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து வில்வித்தையிலே வல்லவனானான். 

அவன் பாரான் வராந்தரத்திலே குடியிருக்கையில் அவனுடைய தாய் எகிப்து தேசத்தாலாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம் பண்ணி வைத்தாள். (ஆதியாகமம் 21:10 முதல் 21:21வரையுள்ள வசனங்கள்) 

இந்த பைபிள் வசனங்களை வாசிக்கும் எவரும் இஸ்மவேலின் சிறப்பை அறிந்துக் கொள்ளலாம். 

தேவன் பிள்ளையுடன் இருந்தார் என்ற வசனமும் பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளைக்கு தேவன் நீரூற்றை உருவாக்கிக் கொடுத்ததும் (இந்த நீரூற்றுதான் அன்றிலிருந்து இன்றுவரை மக்காவில் ஜம்ஜம் என்ற பெயருடன் வற்றாமல் இருக்கின்றது) இஸ்மவேலின் ஜாதியை பல்கி பெருகசெய்வேன் என்ற தேவனின் வார்த்தைகளும் அரேபிய சமுகத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறுகின்றது.

உமர்:

இந்த வசனங்கள் பைபிளின் தேவன் ஆகாருக்கும், இஸ்மவேலுக்கும் காட்டும் அன்பு, பரிவு, பாதுகாப்பு போன்றவற்றைக் காட்டுகிறது. இதில் இஸ்மவேலின் சிறப்பு என்ன இருக்கிறது. இதில் இறைவனின் சிறப்பு தான் மேலோங்கி நிற்கிறது. தன் படைப்பின் மீது அன்பு காட்டுவது இறைவனின் இயல்பு. 

சரி, விசுவாசத்தின் தந்தை என்று கிறிஸ்தவர்கள், யூதர்கள் சொல்லும் "ஆபிரகாமின் மகனுக்கு" நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம். இஸ்மவேல் சிறந்தவர் தான். நாங்களும் அவருக்கு மதிப்புத் தருகிறோம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 

தேவன் அந்த பிள்ளையோடு இருந்தார் என்று நாங்கள் வாசிக்கிறோமே, தேவனே அவரை ஆசீர்வதித்து இருக்க, நாங்கள் எம்மாத்திரம் சொல்லுங்கள். இஸ்மவேலோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 

எங்கள் பிரச்சனை அல்லது கருத்து என்னவென்றால், தேவன் செய்த உடன்படிக்கை ஈசாக்கோடு மட்டும் தான் என்பது. அவ்வளவு தான். இஸ்மவேலும் ஆபிரகாமின் குமாரன் தான், இன்னும் ஆபிரகாமுக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள் தான். ஆனால், தேவன் கொடுத்த உடன்படிக்கை ஈசாக்கோடு என்றுச் சொல்கிறோம். இஸ்மவேலை நாங்கள் அவமதிக்க வில்லை. 

பாலைவனத்தில் விடப்பட்ட பிள்ளையோடு இறைவன் இருந்தார் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். 

  • நீங்கள் சொல்லுங்கள், இப்போது நீங்கள் சொன்னது போல, "ஆகாரையும், இஸ்மவேலையும்" பாலை வனத்தில் விட்டு ஆபிரகாம் சென்றாரா? அல்லது 
  • மக்காவரையில் அழைத்துச் சென்று "ஆபிரகாமும் அவர்களோடு" காபாவை புதுப் பித்தாரா? 

//நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். // 

ஆதியாகமம்: 16: 8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். 

முதல் முறை சாராள் ஆகாரை கடினமாக நடத்தும் போது, ஆகார் வீட்டை விட்டு ஓடும் போது, அதே தேவன், மறுபடியும் உன் நாச்சியாரிடம் சென்று இரு என்றுச் சொன்னார், ஆனால், இப்போது தேவன் பிள்ளைக்கு பாதுகாப்பு அளித்து, ஆசீர்வதித்து தனியாக ( ஆபிரகாமையும், ஈசாக்கையும்) விட்டு செல்லும் படி சொல்கிறார். இதைத் தான் நங்களும் இன்று நம்புகிறோம். இஸ்மவேல் ஆபிரகாமின் மகன் இல்லை என்றுச் நாங்கள் சொல்லவில்லை. தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஈசாக்கு மூலம் தான் நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார் என்றுச் சொல்கிறோம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

இந்த பைபிள் வசனங்களை அப்படியே நம்பினால் இஸ்மவேலின் வழித்தோன்றலாக வந்த முஹம்மத் அவர்களும் சிறப்புப் பெற்றுவிடுவார்களே என்றஞ்சிய பவுலின் கிறிஸ்தவ குருமார்கள் பிற்காலத்தில் பைபிளில் சில வசனங்களை சேர்த்துள்ளனர்.

உமர்:

சரி, நீங்கள் பைபிள் வசனங்கள் எல்லாவற்றையும் அப்படியே நம்புகின்றீர்களா? 

  • ஆதியாகமம் மோசேயினால் கி.மு. 1450-1410 ல் எழுதப்பட்டது என்று நம்பப்படுகிறது.
  • முகமதுவின் காலம் கி.பி. 570-632.
  • முகமதுவின் காலத்தோடு தோராயமாக பார்த்தால், 2000 வருடங்களாக பைபிள் புழக்கத்தில் இருந்து இருக்கிறது.
  • பல பைபிள் பிரதிகள் எடுத்து இருப்பார்கள். மக்கள் பல பாகங்களுக்கு சென்று இருப்பார்கள். 

நீங்கள் சொல்வது போல, கிறிஸ்தவ குருக்கள் பைபிளை மாற்றி இருந்தால், எதை மாற்றி இருப்பார்கள்?, தங்களிடம் உள்ள, மற்றும் தங்கள் ஊரில் உள்ள பிரதிகளை மாற்றி எழுதமுடியும். மற்ற பிரதிகளை (2000 வருடங்களாக உள்ள பிரதிகளை) யார் மாற்றியது ? குருக்கள் மாற்றினால், மற்றவர்கள் என்ன சும்மா இருப்பார்களா? ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள்? 

மக்காவிற்கு ஆயிர மைல் அப்பால் உள்ள இடங்களில் உள்ள பைபிளை யார் மாற்றுவது. அவர்களுக்குத் தான் முகமது என்பவர் ஒருவர் பற்றி தெரியவே வாய்ப்பு இல்லையே? அவர்கள் ஏன் என்று கேட்க மாட்டார்கள்? 

எனவே, மாற்றிவிட்டார்கள் என்று வெறுமனே சொல்லலாம், ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராது, நண்பரே. 

சரி, முகமதுவிற்கு முன்பு(கி.மு 1450 - கி.பி. 560) உள்ள மாற்றப்படாத ஒரு பைபிளை கொண்டு வாரும், இன்று எங்களிடம் உள்ள பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்? (நான் ஏன் உங்களை கொண்டுவரும்படிச் சொல்கிறேன் என்றால், "மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டியது நீங்கள், எனவே, அதை நிருபிக்கும் பொறுப்பும் உம்முடயது) 

கி.மு. 2 அல்லது 3ம் நூற்றாண்டிற்கு சம்மந்தப்பட்ட பைபிள் பிரதிகள் "சவக்கடல் சுருள்கள்" கிடைத்தது. அவைகள் இப்போது நம்மிடம் உள்ள பைபிளுக்கு ஒத்து இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

சரி இதை சிந்தியுங்கள், இப்போது ஒரு கிறிஸ்தவ குரு, ஒரு முஸ்லீம் போல மாறி, முஸ்லீம்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்துக்கொண்டு, சில வருஷங்கள் கழித்து, குர்-ஆனில் இயேசுவைப் பற்றி இன்னும் வசங்களை கிறிஸ்தவர்களுக்கு எதிராக நான் சேர்க்கப்போகிறேன் என்றுச் சொன்னால், அது நடக்குமா? முஸ்லீம்கள் சும்மா இருப்பார்களா? ஒரு வேளை அவர் மாற்ற நினைத்தாலும், உலக முழுவதும் ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் உள்ள குர்-ஆனில் யார் மாற்றுவது, சாத்தியாமா என்றுப் பாருங்கள். குர்-ஆனை அல்லா பாதுகாப்பதாக சொல்லியுள்ளார் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். (இது ஒரு உதாரணத்திற்காகச் சொன்னது). 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக. 

அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12) 

இந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும் இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு வழங்குவாரா... 

இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது. 

இல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால் இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள்.

உமர்:

"துஷ்ட மனுஷன்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள், ஆங்கிலத்தில் அது "Wild Man" என்றும், "Wild Donkey" என்றும் உள்ளது. 

Genesis 16:12 He will be a wild donkey of a man; his hand will be against everyone and everyone's hand against him, and he will live in hostility toward [a] all his brothers." ( NIV - http://www.biblegateway.com/passage/?search=Genesis%2016:12&version=31

Genesis 16:12 And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren. (King James Version : http://www.biblegateway.com/passage/?search=Genesis%2016:12;&version=9;

இந்த வசனத்தில் சொல்லப்பட்டது, ஒரு மனிதன் வளர்க்கும் தன் கழுதை எப்படி முரட்டாட்டம் பிடிக்குமோ, அப்படி "முரடணாக" இருப்பார் என்று ஒரு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு தான். 

அவரை "மனித குல விரோதி" என்று யார் சொன்னது, நீங்கள் தான் சொல்கிறீர்கள். 

பைபிள் வசனத்தை நன்றாக பாருங்கள்: 

"அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்

"இவருடைய கை எல்லாருக்கும் விரோதமாக இருக்கும்" என்றால், இவர் சண்டை பொடுவார் என்று பொருள் கொள்ளலாம், சரி அதை அடுத்து படியுங்கள் " எல்லாருடைய கை இவருக்கு விரோதமாக இருக்கும்", மற்றவர்களும், இவரைச் சுற்றி உள்ளவர்களும் இவரோடு சண்டை போடுவார்கள் என்று பொருள் வருகிறது அல்லவா? 

இங்கு சொல்லப்பட்டது இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு போல)என்பதே தவிர, இவர் மட்டும் கொடுமைக்காரர் என்று அல்ல. 

இயேசு தன் முக்கியமான சீடனைப் பார்த்து "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்". இவர் தான் பேதுரு, ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் தலைவர், சொல்லப்போனால், "கிறிஸ்தவ மூத்த குரு". இவரை திட்டிய வசனம் கூட பைபிளில் உள்ளது. இஸ்மவேலுக்கு சொன்னதோ, "ஒரு மனிதனுடைய கழுதை போல", ஆனால், பேதுருவிற்கோ " சாத்தானே" என்று இயேசுவே திட்டிவிட்டார். அதற்காக இன்று உள்ள கிறிஸ்தவர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களா? என்ன? 

இயேசு, தன் சபை பொறுப்பை இவரிடம் ஒப்படைக்க வில்லையா? இவர் தான் இயேசுவை விட்டு தூரமாக போய்விட்டாரா? 

//இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.// 

நாங்கள் தான் சொல்கிறோமே, தேவன் ஆசீர்வதித்த மனிதன் இஸ்மவேல், தேவன் பெயர் சூட்டிய மனிதன் "இஸ்மவேல்". அவர் குணம் கொஞ்சம் "கடினமானது" என்று பைபிள் சொல்கிறது அவ்வளவு தான். 

இஸ்மவேலை விடும், ஆபிரகாமைப் பாரும், இவரின் வம்சத்தில் வந்தவர் தானே முகமது கூட (இஸ்லாம் படி, நான் நம்புவது, நம்பாதது அது வேறு விஷயம்), அப்படி இருந்தும், நாங்கள் "முகமதுவை" நபியாக ஏற்றுக்கொள்ள முடியாது. 

இயேசுவின் வம்சவரலாறு உமக்கு தெரிந்து இருக்கும், அவர் வந்த வம்சம் எப்படிப் பட்டது. தாவிது, தன் சிப்பாயின் மனைவியோடு விபச்சாரம் செய்தான், தேவன் அவன் குழந்தையை மரிக்கச் செய்தார். சாலொமோன் பல மனைவிகளை கொண்டான், தேவனுக்கு தூரமாகச் சென்றான், பிறகு மனம் திரும்பி வந்தான். இப்படி பலபேர் 

எனவே, "வம்சத்தை பார்த்து கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, வந்தவரைப் பார்த்து விசுவாசிக்கிறோம்".

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

இஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள் கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம். 

தேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா.... ஈசாக்கையா..... 

ஆப்ரஹாம் இஸ்மவேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார் என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின் சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும் நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள். 

ஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.

உமர்:

நண்பரே, முகமது வந்தது கி.பி. 570-632 ல். புதிய ஏற்பாட்டிலேயே முதல் நூற்றாண்டிலேயே சொல்லப்பட்டுள்ளது "ஆபிரகாம் பலியிட்டது ஈசாக்கை" என்று. 

எபிரெயர் 11:17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது. ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் 

எபிரெயர் 11:18 ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி , 

யாக்கோபு 2:21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது , கிரியைகளினாலேஅல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 

இந்த வசனங்கள் எழுதப்பட்டது முதல் நூற்றாண்டில் சகோதரரே, 7ம் அல்லது 8ம் நூற்றாண்டில் இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம். 

(இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102) 

இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.

உமர்:

குர்-ஆனில் இந்த வசனத்தில் முதலில் "இஸ்மவேல்" தான் பலியிடப்பட்டது என்று பெயர் வருகிறதா அல்லது அந்தப் பெயரை அடைப்பு குறிக்குள் இடுகிறீர்களா? 

குர்-ஆன் குறிப்பிட்டு "இஸ்மவேல்" தான் என்றுச் சொல்வதில்லை, அரபிக் குர்-ஆனில் "இஸ்மவேல்" என்ற வார்த்தை இந்த வசனத்தில் உள்ளதா என்று பாருங்கள்.(எனக்கு அரபி தெரியாது, எனவே, வசனத்தை அரபியில் இருந்தால், சொல்லுங்கள்) 

ஹதீஸ்களிலிருந்து இஸ்மவேல் என்று தெரிந்துக்கொண்டு இங்கு "இஸ்மவேல்" என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். 

ஆனால், "இஸ்மவேல்" என்று இந்த வசனம் சொல்வதில்லை.

குர்-ஆன் 37:100 

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ 

குர்-ஆன் 37:100 "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). 

குர்-ஆன் 37:101 

فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ 

எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். 

குர்-ஆன் 37:102 

فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاء اللَّهُ مِنَ الصَّابِرِينَ 

பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." 

நான் www.tamililquran.com , www.chittarkottai.com/quran/index.php என்ற தளங்களை தேடிவிட்டேன், நீர் சொன்னது போல, அடைப்பு குறிக்குள் "இஸ்மவேல்" பெயர் இல்லையே? வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு இருந்தால் சொல்லவும். இந்த இரண்டு தளங்களிலும் "அம்மகன்" என்று தான் வருகிறது.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

பைபிள் என்ன சொல்கின்றது? 

அப்போது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2) 

இந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான் என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும் இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். 

எப்படி? 

நாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர் 'உன் புத்திரன்' 'ஏகசுதன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று பொருள். 

உன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின் உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம் இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார். 

ஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம் என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16) 

தனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல் குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார். 

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5) 

இந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர் சொல்லி இருந்தால் நிச்சயமாக 'ஏகசுதன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது. 

ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?

உமர்:

இஸ்லாமிய நண்பரே, 

ஆதியாகமம் 21ம் அதிகாரத்திலேயே, ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் தனியே அனுப்பிவிட்டார், அதுவும் அசீர்வதித்து அனுப்பிவிட்டார், நீர் சொல்வது போல இஸ்மவேலை சிறப்பித்து, அனுப்பிவிட்டார். 

இதை ஆபிரகாமே செய்தார். நீர் கூட இந்த கட்டுரையின் முதலில், பைபிள் சிறப்பித்த இஸ்மவேல் என்றுச் சொல்லி, அந்த வசனங்களை சொல்லியிருந்தீர். 

ஆதியாகமம்: 21:9. பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,10. ஆபிரகாமை நோக்கி, இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.11. தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். 

ஈசாக்கை பலியிடச் சொன்னது ஆதியாகமம் 22ம் அதிகாரம். இஸ்மவேலை தேவன் ஆசீர்வதிப்பேன், பிரபுக்களை உண்டாக்குவேன் என்றுச் சொல்லிவிட்ட பிறகு நடந்த விவரங்கள். 

எனவே, ஆதியாகமம் 22:2ம் வசனத்தில் சொன்ன "ஏகசுதன்" இஸ்மவேல் இல்லை, "ஈசாக்கு" தான். 

இனி உம் விருப்பம்: 

1) பைபிளில் இஸ்மவேலை தேவன் பாலைவனத்தில் பிள்ளையோடு இருந்து, ஆசீர்வதித்தார் என்பதை நம்புவீரோ (ஆதியாகமம் 21ம் அதிகாரம்) 

அல்லது, 

2) இந்த பலியிட்டது (ஆதியாகமம் 22ம் அதிகாரம்) இஸ்மவேல் என்பதை நம்புவீரோ, இனி எல்லாம் உம் கையில். 

பலியிட்டது "இஸ்மவேல்" என்றுச் சொன்னீர் என்றால், இந்த உம்முடைய கட்டுரையின் "கருவே - பைபிள் புகழும் இஸ்மவேல்" பாதிக்கப்படும் அல்லது பொய்யாகிவிடும். இஸ்மவேலை பைபிள் புகழும் வசனங்கள் நீர் காட்டியது, பாலை வனத்தில் ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் ஆசீர்வதிக்கும் போது சொன்ன வசனம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது 

இந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார் ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை சொந்தக் குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். 

இதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம். 

ஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தகப்பனாவான். இதுதான் உலக நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில் ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால் கூட நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று தீர்பளிக்கும். 

ஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும். அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது யார். ஆப்ரகாம் அந்தப் பெண்ணுடன் கூடி அதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை அல்லவென்று எப்படி கூற முடியும். 

இஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ உலகம் வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து விடுகின்றது.

உமர்:

நீங்கள் சொன்னது போல, கிறிஸ்தவ குருக்கள் போல, நான் சொல்ல மாட்டேன். இஸ்மவேல் அபிரகாமின் மகன் தான். நாங்கள் ஏற்றுகொள்கிறோம். ஆனால், என் வாதம் என்ன? 

தேவன் பலியிடச் சொன்னபோது, இஸ்மவேல் அங்கு வீட்டில் இல்லை, ஆபிரகாமின் வீட்டில் இல்லை, உங்கள் கூற்றுப்படி, பைபிள் இஸ்மவேலை சிறப்பித்து தனியே அனுப்பிவிட்டது. சிம்பில். 

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

அபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு மறுமணையாட்டியாக் கொடுத்தாள். (ஆதியாகமம் 16:3) 

சட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில் வந்த பிறகே ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து இஸ்மவேலை பெற்றெடுக்கிறார். 

கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர் எப்படி வெளிபடுத்துகிறார் என்று பாருங்கள். 

ஆப்ரகாமுடைய நுனித்தோல் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான். 

அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் பதிமூன்று வயதாயிருந்தான். (ஆதியாகமம் 17:23-25) 

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. (ஆதியாகமம் 21:10-11) 

இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். 

நாம் இதில் எடுத்துக் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் அதற்கான விளக்கங்கள் இவற்றை நிதானத்தோடு ஊன்றி படிக்கும் யாவரும் இஸ்லாத்திற்கான அழைப்பின் வாசல் பைபிளில் இருக்கின்றது என்பதை கண்டுக் கொள்வார்கள்.

உமர்:

//நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

. . . 
கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை
// 

நீங்கள் சொல்வது தவறு, பைபிளில் உள்ள வசனங்களை நான் தருகிறேன்: 

கீழே உள்ள வசனங்களைப் பார்த்தால், தேவன் "ஆகாரை" சாராளின் அடிமை அல்லது வேலையாள் என்று அழைக்கிறார். தனக்கு சாராள் நாச்சியார்(முதலாளி) என்றுச் ஆகார் சொல்லுகிறார். 

a) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8 

ஆகாரும் தன்னை "ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை" தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள். 

கர்த்தருடைய தூதனானவர் கூட "ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்" சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார். 

ஆதியாகமம் 16:7-8

16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு, 

16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். 

மற்றொரு இடத்தில் "ஆகாரே" என்று அழைக்கிறார், தேவதூதனானவர். 

ஆதியாகமம்: 21: 12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். 13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். 

ஆதியாகமம்: 21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார் 

b) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6 

ஆதியாகமம் 16:6 

16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.

மேலே சொன்ன வசனங்களில் தேவனும், அபிரகாமும், "அடிமைப் பெண்ணே" என்று தான் அழைக்கிறார். மற்றொரு இடத்தில் தேவதுதன் "ஆகாரே" என்று அழைக்கிறார். 

இப்படி இருக்க எப்படிச் சொல்கிறீர் நீர், "தேவன் ஆகாரை அடிமைப்பெண் என அழைக்கவில்லை என்று"?

நீர் ஒன்று செய்யலாம், இந்த வசனங்களை நம்பாமல் இருக்கலாம், அது உங்கள் விருப்பம். ஆனால்,  பைபிளில் இருக்கும் வசனம் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர் ? 

//நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

. . . 
இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
// 

இப்போது பிரச்சனையே, மதகுருக்கள் சொன்னதால் அல்ல, "பைபிள்" சொன்னதால் தான். 

கிறிஸ்தவ குருக்கள் என்ன தங்கள் கையில் "எபிரேய" பைபிளை வைத்துக்கொண்டு "இதில் இப்படி உள்ளது" நம்புங்கள் என்றுச் சொல்கிறார்களா? எங்களிடம் தமிழில், ஆங்கிலத்தில் பைபிள் இல்லையா? அவர்கள் சொல்வதைக்கேட்டு அப்படியே நம்பிவிடுவதற்கு?

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது

எந்த தேவன் மோசேயை அனுப்பினாரோ எந்த தேவன் இயேசுவை அற்புதமான முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பினாரோ அதே தேவன் தான் முஹம்மத் அவர்களை இஸ்மவேலின் வம்சாவழியில் பிறக்க செய்து இறைத்தூதராக்கி அவரைப் பின்பற்ற சொல்லியுள்ளான். 

இயேசுவை ஏற்போம் முஹம்மதை புறக்கணிப்போம் என்று யாராவது முடிவெடுத்தால் அவர் முஹம்மதை புறக்கணிக்கவில்லை. மாறாக இயேசுவை அனுப்பிய அந்த தேவனைப் புறக்கணிக்கிறார் என்பதே உண்மையாகும். கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்திப்பார்களா...?

உமர்:

ஒரு விவரத்தை சொல்லட்டுமா, இயேசு தான் "மோசேயை" அனுப்பினார், தெரியுமா உமக்கு? 

ஆதியிலே வார்த்தை இருந்தது, அது தேவனிடத்தில் இருந்தது, அது தேவனாயிருந்தது. அந்த வார்த்தை இயேசுக் கிறிஸ்து. 

சரி, நாங்கள் கடைசியாக எதை நம்புகிறோம் என்று சொல்லிவிடுகிறேன்: 

1. இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன் - ஆமென். 

2. தேவன் இஸ்மவேலை அபரீதமாக ஆசீர்வதித்து வருகிறார், இன்னும் ஆசீர்வதிப்பார். - ஆமென். 

3. கிறிஸ்தவர்கள் இஸ்மவேலை ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்தவர் என்பதை நம்புகின்றனர் - ஆமென். 

4. தேவனுடைய வார்த்தை மாறாதது, அவர் கொடுத்த வாக்குத்தத்தம் "ஈசாக்கு" மூலமாக நிறைவேறியது. - ஆமென். 

5. நாங்கள் இஸ்லாமியர்களை நேசிக்கிறோம், ஜெபிக்கிறோம், அதற்காக முகமதுவை நம்பவேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை பைபிள் படி. 

ஜெபம்: எங்கள் அனைவரையும் நேசிக்கின்ற எங்கள் இயேசுவே, நீர் தான் வழி என்பதை எல்லாரும் அறியும் படி மனக்கண்களை திறந்தருளும். நானே வழி என்றுச் சொன்னீரே. உம்முடைய வழியில் நடக்க அருள் புரியும். இயேசுவின் பெயரில் ஜெபிக்கின்றேன்(றோம்) - ஆமென்.

மூலம்: http://isakoran.blogspot.in/2007/07/blog-post_11.html

தேதி: 12 ஜூலை, 2007

தமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்